Wednesday 4 January 2012

தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜயகாந்த் ஆறுதல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், புதுவை மக்களுக்கு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று நேரில் ஆறுதல் கூறினார். 1,000 பேருக்கு வேட்டி, சேலை, உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். அப்போது நிவாரணப் பொருட்களை வாங்குவதற்கு கூட்டம் முண்டியடித்ததால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 15 பேர் படுகாயம் அடைய நேரிட்டது.
தானே புயலால் தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன. வீடுகளும் பயிர் செய்கைகளும் பெருத்த சேதத்துக்கு உள்ளாகி உள்ளன. குறிப்பாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்

0 comments: