Thursday 8 December 2011

கேரள மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை: பழிவாங்கும் உணர்ச்சி வேண்டாம் என்று கேரள மக்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார். முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே வலுத்துவரும் பிரச்சினையை அரசியல்வாதிகள் ஊதிப் பெரிதாக்குகின்றனர். அதை மக்கள் பொருட்படுத்த வேண்டாம். இரு மாநில மக்களுக்கு இடையேயும் பல நூற்றாண்டுகளாக ஒற்றுமைப்போக்கே வளர்ந்துள்ளது. கேரள மக்கள் தமிழகத்திலும் தமிழக மக்கள் கேரளத்திலும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பழிவாங்கும்போக்கு தலைதூக்கினால் இதுவரை கட்டிக் காத்து வந்த உறவு, ஒரு மாநிலத்தார் மீது மற்றொரு மாநிலத்தார் கொண்டுள்ள நம்பிக்கை போன்றவை அழிந்து போய்விடும் என்று ëஜயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார். மரியாதையோடும் உயர்ந்த எண்ணம் கொண்ட அறிவாளி மற்றும் கல்வியாளர்களாகவும் கடின உழைப்பாளிகளாகவும் வாழும் கேரள மக்களிடம் வேண்டிக் கொள்வதாக தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 comments: