Friday 23 December 2011

டேம் 999 திரைப்பட பாடல்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மலையாள இயக்குனர் சோஹன் ராய் இயக்கியுள்ள டேம் 999 திரைப்படத்தின் பாடல்களுக்கு ஒஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் தமிழகம் மற்றும் கேரளா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அணை உடைந்து பேரழிவு ஏற்படுவது போல் டேம்999 என்ற திரைப்படத்தை கேரளாவை சேர்ந்த இயக்குனர் சோகன் ராய் இயக்கி உள்ளார்.
இந்த திரைப்படத்துக்கு ஒசிபச்சன் இசையமைத்து உள்ளார். சர்ச்சைக்குரிய இந்த திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் டேம்999 திரைப்படமும், அதன் 3 பாடல்களும் 2011 ஓஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பு ‘ஸ்லம்டாக் மில்லினர்’ திரைப்படத்தின் பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தன.
தற்போது ரஹ்மான், ஏக் திவானா தா என்ற பாலிவுட் திரைப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழாவுக்காக ஆக்ரா வந்துள்ள ரஹ்மான், அங்கு அளித்த பேட்டியில், ஆஸ்கார் விருதுக்கான திரைப்படங்களின் போட்டியில் டேம்999 திரைப்படமும், அதன் 3 பாடல்களும் சேர்க்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பாடல்களில் ஏதாவது ஒன்றாவது ஆஸ்கார் விருது பெற வேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார் 

1 comments:

said...

தகவலுக்கு நன்றி நண்பரே!
அப்படியே இதுக்கும் பதில் சொல்லிட்டுங்க...:
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"