Monday 26 December 2011

டிசம்பர் 30ல் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 30ம் திகதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.
இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது, பல்வேறு பிரச்சினைகளில் திரைப்படத் துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தனர். ஆனால், முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் அப்படி ஒன்றிணைந்து குரல் கொடுக்கவில்லை. ஏன் என்றால் இங்கு தமிழர்களுக்கு என்று தனியாக சங்கம் இல்லை.
தென்னிந்தியத் திரைப்படக் வர்த்தக சபை என்று இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருக்கிறது. ஆனால் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை, தமிழ் நடிகர் சங்கம் என்று இல்லை. இதில் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் வைத்திருக்கிறோம். அதனால்தான் இந்த விவகாரத்தில் போராடி வருகிறோம். டிசம்பர் 30ம் திகதி எங்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளோம். திராவிடம் என்று பேசி அரசியல் செய்பவர்களும் இத னை யோசிக்க வேண்டும் என்று அவர் கூறினார். சென்னையில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா வுடன் இயக்குநர் தங்கர்பச்சான், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments: