இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மக்கள் நலப்பணியாளர்களுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக தமிழகம் முழுவதும் சுமார் 13,500 பேர் கடந்த ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக அரசு திடீரென ஒரே உத்தரவில் அவர்களை சமீபத்தில் பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேருக்கும் பணி வழங்க வேண்டும். அதற்கான அறிக்கையை இன்று (23.11.2011) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நேற்று (22.11.2011) சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. மேலும் மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேரை மீண்டும் பணியில் அமர்த்தும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தார்கள்.
முன்னதாக தமிழகம் முழுவதும் சுமார் 13,500 பேர் கடந்த ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழக அரசு திடீரென ஒரே உத்தரவில் அவர்களை சமீபத்தில் பணி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேருக்கும் பணி வழங்க வேண்டும். அதற்கான அறிக்கையை இன்று (23.11.2011) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து நேற்று (22.11.2011) சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. மேலும் மக்கள் நல பணியாளர்கள் 13,500 பேரை மீண்டும் பணியில் அமர்த்தும் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தார்கள்.
0 comments:
Post a Comment