Thursday 3 November 2011

விஜய்யின் அம்மாவுக்கு கலையியல் அறிவுரைஞர் பதவி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகர் விஜய்யின் அம்மாவுக்கு, முதல்வர் ஜெயலலிதா, கலையியல் அறிவுரைஞர் எனும்
பதவியை கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள இசை கல்லூரி மற்றும் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த புது உத்தரவு பிறப்பித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
தமிழகத்தின் மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 17 இசை பள்ளிகளின் தரத்தை உயர்த்த, டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மனைவியுமான ஷோபா சந்திரசேகருக்கு கலையியல் அறிவுரைஞர் எனும் புதுப்பதவியை வழங்கியுள்ளார்.
இவரது பதவியின் முக்கிய நோக்கமே தமிழகத்தில் உள்ள இசை பள்ளிகளின் தரத்தை உயர்த்துவது தான்.
ஏற்கனவே தமிழகத்தில் உள்ள 4 இசை கல்லூரிகளுக்குமே வீணை காயத்ரி என்பவர் இந்த பதவியை வகித்து வருகிறார்.
சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக விஜய்யின் மக்கள் இயக்கம் செயல்பட்டதன் பிரதிபலனாகத்தான், ஷோபா சந்திரசேகருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது

0 comments: