Wednesday 28 September 2011

நவராத்திரி விழா இன்று ஆரம்பம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முப்பெரும் தேவிகளுக்கு விழா எடுக்கும் நவராத்திரி விழா இன்று ஆரம்பமாகிறது.
புரட்டாதி மாதத்தின் வளர் பிறையின் முதல் நாளில் இருந்து 9 நாட்கள் நவராத்திரி விழா ஆரம்பமாகிறது.
நவராத்திரி விழாவில் 9 நாட்களும் 3 சக்திகளும் முப்பிரிவாக பிரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரத்தை பூஜிக்கும் வகையில் நவராத்திரி அமைந்துள்ளது.
முதல் 3 நாட்கள் துர்கா தேவியாகவும், மாயா சக்தியான மகா காளியாகவும் (துர்கா), அடுத்த 3 நாட்கள் கிரியா சக்தியான மகாலட்சுமியாகவும் கடைசி 3 நாட்கள் ஞான சக்தியாகவும் சரஸ்வதி தேவியாகவும் அம்பாள் அருள்பாலிக்கிறாள். நவராத்திரியின் நிறைவாக சரஸ்வதி பூஜையும், விஜயதசமியும் பண்டிகைகளாகக் கொண்டாடப்படும்.

0 comments: