Thursday 29 September 2011

ரயிலில் தயிர் கொடுத்து ரூ.4 லட்சம் கொள்ளை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மும்பையிலிருந்து சென்னை வந்த ரயிலில் பயணம் செய்த வயதான தம்பதியருக்கு மயக்க மருந்து
கலந்த தயிர் கொடுத்து ரூ. 4 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கோபாலன் (68 வயது), கீதா (58 வயது) ஆகிய இத்தம்பதியர் ரயிலில் தயிர் வினியோகம் செய்த ஊழியரிடமிருந்து தயிர் வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். இதன் பிறகு இருவரும் மயங்கிவிட்ட நிலையில், அவர்கள் தூங்குவதாக சக பயணிகள் கருதியுள்ளனர். சென்னை வந்த பிறகு கண்விழித்த தம்பதியர் தாங்கள் கொள்ளையடிக்கப்பட்டதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரயில்வே போலிசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து தயிர் வினியோகித்த ஊழியரை போலிசார் வலைவீசித் தேடி வருகிறார்கள்.

0 comments: