Thursday 18 August 2011

அன்னா ஹசாரெவின் போராட்டம் குறித்து முதல் முறையாக தமிழகத்திலிருந்து பிரபல நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அன்னா ஹசாரெவின் போராட்டம் குறித்து முதல் முறையாக தமிழகத்திலிருந்து பிரபல நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.


நாட்டின் மீது நாம் கொண்டுள்ள பற்று காரணமாகத்தான் இன்று வரை நாம் லஞ்ச ஊழலைச் சகித்துக்கொண்டு வாழ்கிறோம். ஆனால், இவ்விவகாரத்தில் மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவர் என அவர் கருத்து தெரிவித்தார்.

அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு இதுவரை வட இந்திய நடிகர் நடிகையர் கருத்து தெரிவித்த போதிலும், தமிழ்நாட்டிலிருந்து இது பற்றி இதுவரை யாரும் மூச்சு விட வில்லை. இந்நிலையில், முதல் முறையாக நடிகர் கமல்ஹாசன், அன்னா ஹசாரேவின் போராட்டம் குறித்து மறைமுகமான கருத்து தெரிவித்துள்ளார். “மக்களிடமிருந்து வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், அதற்குத் தகுதாற்போல் மக்களுக்கு அடிப்படை வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படுவதில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்த பணம், லஞ்சம் ஊழல் என கரைகிறது. ஆனாலும் நாட்டுப்பற்று காரணமாக இங்கு வாழ்கிறோம். எனினும், என்னை மாதிரி உள்ள லட்சக்கணக்கான மக்கள் ஒரு நாள் மாற்றத்தை ஏற்படுத்துவர் என்ற நம்பிக்கை உள்ளது” என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

0 comments: