இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை: தமிழகத்தில் எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது அணி
அமைக்கும் முயற்சியில் பாமக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இம்முறை பாமகவும் மதிமுகவும் கூட்டணி அமைக்க அதிக வாய்ப் பிருப்பதாக கூறப்படுகிறது. இதேவேளையில் பிணக்குகளை மீறி காங்கிரசுடன் இணைந்து செயல்பட திமுக முடிவு செய்திருப் பதாகவும் தெரிகிறது. இனி அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் எக்காலத்திலும் கூட்டு சேரப் போவதில்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். எனவே உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்க அவர் தீவிரமாக முயன்று வருகி றார். தமது அணியில் மதிமுகவைச் சேர்க்க அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் சில சிறிய கட்சிகளும் பாமக கூட்டணியில் இணையக் கூடும் என்று அரசியல் கவனிப் பாளர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சி களுக்கும் மாற்று என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பை தேமுதிக ஏற்படுத்தி யது. இதற்கேற்ப கடந்த தேர்தல் களில் தனித்துப் போட்டியிட்டு கணிசமான வாக்குகளையும் பெற்றது அக்கட்சி. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக போட்டியிட்டது. இதன் மூலம் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று என்ற அந்தஸ்தை விஜயகாந்த் இழந்து விட்டதாக அரசியல் கவனிப் பாளர்கள் கருதுகிறார்கள். எனவே திமுக, அதிமுகவுக்கு அடுத்த மூன்றாவது இடத்தைப் பிடிப்பதில் தற்போது கடும் போட்டி நிலவி வருகிறது. உள்ளாட்சித் தேர்தலின் மூலம் இந்த இடத்தைப் பிடிக்க பாமக தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனது பலத்தை நிரூபித்தால் மீண் டும் அனைத்துக் கட்சிகளும் தங் களின் தயவை நாடி வரும் என்று டாக்டர் ராமதாஸ் கணக்கிடுகிறார். இதன் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியுடன் இணைந்து கணிசமான இடங்களைப் பெற லாம் என்பது அவரது கணக்காக உள்ளது என்கிறார்கள் அரசியல் கவனிப்பாளர்கள். பாமக தலைமையில் அமைய இருக்கும் மூன்றாவது அணியில் மதிமுகவை தவிர காங்கிரசும் இணையுமா? என்ற புதிய கேள்வி எழுந்துள்ளது. எனினும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற மதிமுக விரும்பாது என்பதால் காங்கிரசுடன் நெருங்கிச் செல்ல பாமக தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும் பாமக, மதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மீண்டும் தங்க ளுடைய பலத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. எனவே காங்கிரசுடன் சேர்ந் தால் அக்கட்சிக்கு மக்களிடம் உள்ள அதிருப்தியால் தாங்களும் பாதிக்கப்படலாம் என இவ்விரு கட்சிகளும் கருதுகின்றன. ஆகை யால் சிறிய கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவதே நல் லது என இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே தற்போதைய நெருக்கடிகளைச் சமாளிக்கும் விதமாக கருத்து வேறுபாடுகளை மறந்து காங்கிரசுடன் இணைந்து செயல்பட திமுக முடிவு செய்திருப் பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்போது முதலே இணைந்து செயல்பட்டால்தான் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சித் தொண்டர்களும் உற்சாகத் துடன் களப்பணி ஆற்றுவார்கள் என திமுக தலைமை காங்கிரஸ் தலைமையிடம் எடுத்துக் கூறி இருப்பதாகத் தெரிகிறது. இதற்கிடையே காங்கிரசுடன் திமுக மீண்டும் உறவு பாராட்டி னால் திருமாவளவன் என்ன முடிவு எடுப்பார், அவர் மூன்றாவது அணியில் இணைவாரா? என்கிற கேள்வியும் தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தல் களத்தில் சுவாரசியத்திற்கு குறைவிருக்காது.
0 comments:
Post a Comment