Tuesday 9 August 2011

இந்து மதத்துக்கு மாறினார்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நடிகரும் இயக்குனருமான பிரபு தேவாவை திருமணம் செய்ய உள்ளார் நடிகை நயன்தாரா
. இதையடுத்து கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு அவர் மாறியுள்ளார். நயன்தாராவுடன் ஏற்பட்ட காதல் காரணமாக, மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார் பிரபு தேவா. இதையடுத்து பிரபுதேவா, நயன்தாரா திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொச்சியில் தங்கியிருந்த நயன்தாரா நேற்று விமானத்தில் சென்னை வந்தார். வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரிய சமாஜ் கோயிலுக்கு காலை 11 மணிக்கு சென்றார்.




அங்குள்ள புரோகிதர்களை சந்தித்து கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவாக மதம் மாறுவதற்கான விருப்பத்தை தெரிவித்தார். இதையடுத்து சுத்தி கர்மா முறைப்படி அவருக்கு மதமாற்றம் செய்வதற்கான நடைமுறைகளை செய்தனர். ஹோமம் வளர்த்து புரோகிதர்கள் மந்திரங்கள் கூறினர். புரோகிதர்கள் சொல்லி கொடுத்தபடி வேத மந்திரங்களை நயன்தாரா திரும்ப சொன்னார். 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சடங்குகள் நடைபெற்றன. பிறகு அவருக்கு இந்து மதத்துக்கு மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்டு மாலையில் கொச்சி திரும்பி சென்றார்.



இதுபற்றி நயன்தாரா கூறும்போது, ‘Ôநான் இந்துவாக மாறிவிட்டேன். இது என் சொந்த விருப்பம். அதற்கான சடங்குகளில் ஈடுபாடு, நம்பிக்கையுடன் பங்கேற்றேன்ÕÕ என்றார். பிரபுதேவாவுடன் திருமணம் எப்போது என கேட்டதற்கு பதில் கூற மறுத்துவிட்டார். இந்து மதத்துக்கு மாறியதை அடுத்து பிரபு தேவாவை நயன்தாரா விரைவில் திருமணம் செய்வார் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments: