இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வெவ்வேறான கட்டிட அமைப்புகளுடன் ஜெடாஹ்வில் அமைந்துள்ள செங்கடல் துறைமுக பட்டணத்தில் இக்கோபுரம் அமைக்கப்படவுள்ளது.
சவூதி அரேபிய கோடீஸ்வரரான அல்வாலீட் தலால் இக்கோபுர அமைப்புக்கான AS $1.23 பில்லியன் (RM3.6பில்லியன்) மதிப்புள்ள குத்தகையில் கையெழுத்திட்டார். இக்கோபுரம் இன்னும் ஐந்து(5) ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் அல்வாலிட்-க்குச் சொந்தமான ஜெடாஹ் நகருக்கு வெளியே அமைக்கப்படவுள்ள இக்கோபுரம் Kingdom City மேம்பாட்டுத் திட்டத்திற்கு உயிர்நாடியாகத் திகழும் என்றும் கூறப்படுகிறது.
“ ஜெடாஹ்வில் அமைக்கப்படவுள்ள இக்கோபுரம் புறக்கணிக்கமுடியாத நிதி மற்றும் பொருளாதார தகவல்களை அனுப்பும்” என இளவரசர் அல்வாலிட் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இக்கோபுரத்திற்கு ஒரு ஆழமான அரசியல் கருத்து உள்ளது. சவூதி மக்கள் உள்நாட்டு முதலீடுகளை மேற்கொள்கின்றனர்; எங்களை சுற்றி நடக்கும் பல்வேறு சம்பவங்கள், மாற்றங்கள் மற்றும் சண்டைசச்சரவுகளுகிடையே நாங்கள் இதனை மேற்கொள்வதை உலகிற்குப் பறை சாற்றும் என்றும் இளவரசர் அல்வாலிட் கூறினார்.
0 comments:
Post a Comment