Thursday 11 August 2011

திருமணம் ஆகாமலேயே 20 குழந்தைகளுக்கு 'அம்மா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருமணம் ஆகாமலே 20 குழந்தைகளுக்கு அன்பான 'அம்மா' வாக மாறியிருக்கிறார்
இளம் நடிகை ஹன்ஸிகா மோத்வானி. 20 குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களுக்கு தாயாக மாறியுள்ளார் ஹன்ஸிகா.




தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களை கைவசம் வைத்துள்ளவர் ஹன்ஸிகா. அடுத்து இவர் நடித்த வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்கள் வெளியான பிறகு இன்னும் பியலமாகிவிடுவார் ஹன்ஸிகா என்கி றார்கள். இத்தனை பரபரப்புக்கு நடுவிலும் மும்பையில் 19 ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்திருந்தார் ஹன்ஸிகா. இப்போது 20வது குழந்தையை தத்தெடுத்துள்ளார். இவர்களுக்கு வெறும் பண உதவி மட்டும் செய்யாமல், படப்பிடிப்பு தவிர்த்த மற்ற நேரங்களில் இந்தக் குழந்தைகளை பூங்கா, சினிமா என வெளியில் அழைத்தப் போய் தேவையா னதை வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்துகிறாராம். இதுகுறித்துக் கேட்டபோது இந்தக் குழந்தைகளை ஒரு தாயைப் போலவே பார்த்துக் கொள்ள விரும்புவதாக ஹன்ஸினா கூறினார். ஹன்ஸிகா இப்போதுதான் 20 வயதில் அடியெடுத்து வைக்கிறார். தனது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில்தான் இந்த 20வது தத்தெடுப்பைச் செய்ததாக அவர் கூறியுள்ளார்.

0 comments: