Saturday 23 July 2011

இஸ்லாம் சமயத்தை மதியுங்கள்; நாங்கள் உங்களுக்கு மதிக்கிறோம்- பிரதமர் நஜீப்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தேசிய முன்னணி அரசாங்கம் இந்நாட்டில் வாழும் கிறிஸ்துவர்களுடன் ஒத்துழைப்பை
நல்கி நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்ப அமைதியையும் சுபிட்சத்தையும் நிலை நாட்டுவதற்கு அரும் பங்காற்றும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறினார்.

“ இந்நாட்டில் வாழும் கிறிஸ்துவர்களுக்குச் சில வார்த்தைகள் கூற கடமைப்பட்டுள்ளேன். அவர்கள் எங்களை (இஸ்லாம் மதம்) மதித்தால், நாங்களும் அவர்களுக்கு மதிப்பளிப்போம்” என்று சுமார் 200 தேசிய முன்னணி ஆதரவாளர்கள் முன்னிலையில் கொம்ப்லேக்ஸ் பூங்கா ராயாவில் இவ்வாறு தெரிவித்தார்.

“இதுவே நாங்கள் வழங்கும் தகவல். இஸ்லாம் ஒரு சிறந்த சமயமாகும்” என்றார் அவர்.

பிரதமர் நஜிப் தமது 10 ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக கத்தொலிக்க கிறிஸ்துவ மதகுவான போப் பெனடிக்குடன் சந்திப்பு நிகழ்த்தியப் பின்பு இன்று தாயகம் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: