Monday 30 May 2011

கருணாநிதி எம்.எல்.ஏ. வாக இன்று பதவியேற்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அமைச்சர் மரியம்பிச்சை இறந்ததால் அமைச்சர் சிவபதி, திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மனோகரன்
ஆகியோர் பதவி ஏற்கவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியும், துரைமுருகனும் அன்றைய தினம் டெல்லி சென்றதால் பதவி ஏற்கவில்லை.
கடந்த 27 ம் திகதி அமைச்சர் சிவபதி, திருச்சி மனோகரன் ஆகியோர் எம்எ.ல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். தி.மு.க. தலைவர் கருணாநிதியும், சட்டசபை தி.மு.க. துணைத் தலைவர் துரைமுருகனும் இன்று காலை எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றனர். இதற்காக 2 பேரும் இன்று புனித ஜார்ஜ்கோட்டையில் உள்ள சபாநாயகர் அறைக்கு சென்றனர். கருணாநிதிக்கும், துரைமுருகனுக்கும் சபாநாயகர் ஜெயக்குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் தி.மு.க. நிர்வாகிகளும் வந்திருந்தனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தொடர்ந்து 12 வது முறையாக எம்.எல்.ஏ.வாக தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments: