Sunday 8 May 2011

உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாணைக்கு வரும் பாபர் மசூதி வழக்கு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பாபர் மசூதி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து பல்வேறு முஸ்லீம் மற்றும் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த மனுக்களின் மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. முன்னதாக அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பகுதிகளாகப் பிரித்து முஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் நிர்மோஹி அகாராக்களுக்கு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மத அமைப்புகள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன. நிர்மோஹி அகாரா, அகில பாரத இந்து மகாசபா, ஜமைத் உலமா-ஐ-ஹிந்த் மற்றும் சன்னி மத்திய வக்ஃப் வாரியம் ஆகியவை தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் அப்டாப் ஆலம் மற்றும் ஆர்.எம்.லோதா ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உள்ளது. பகவான் ராம் விராஜ்மன் சார்பிலும் ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாமல், நம்பிக்கையின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது அதை ரத்துசெய்ய வேண்டும் என வக்ஃப் வாரியமும், ஜமைத் உலமா-ஐ-ஹிந்த் அமைப்பும் தங்கள் மனுக்களில் குறிப்பிட்டுள்ளன.
ராமர் பிறந்த இடத்தில் அந்த கட்டடம் இருந்தது என தவறாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 comments: