Sunday 8 May 2011

பிளஸ்-2 தேர்வு முடிவு நாளை வெளியாகிறது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
:

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வை 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவ- மாணவிகள்
எழுதி னார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனி தேர்வர்களாக எழுதினார்கள். விடைத்தாள்கள் திருத் தும் பணிகள் கடந்த மாதம் 19-ந்தேதி முடிவடைந்தது. அதன் பிறகு டேட்டா சென்டர்கள் மூலம் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணியும், பிழைகளை திருத்தும் பணியும் நடந்தது.
அனைத்து பணிகளும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

0 comments: