Sunday 24 April 2011

நீச்சல் உடையில் நடிக்க தயார்" சினேகா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழ் சினிமாவின் அதிகமான கவர்ச்சி என்றால் அது நீச்சல் உடைதான்.
அதனால்தான், புதிதாக வரும் நடிகைகளிடம் பத்திரிகையாளர்கள் கேடும் முதல் கேள்வியும் முக்கிய கேள்வியுமாக இருப்பது, "நீங்கள் நீச்சல் உடையில் நடிப்பீர்களா?" என்பதுதான். இந்த கேள்வி வளையத்திற்குள் சினேகாவையும் சிக்க வைத்திருக்கிறார்கள் ஆந்திர பத்திரிகையாளர்கள்.

புன்னகை இளவரசியான சினேகா, பவானியின் மூலம் ஆக்ஷன் இளவரசியாக ஆனது அனைவரும் அறிந்தது. படம் என்னவோ எதிர்பார்த்தது போல போகவில்லை என்பதால் சினேகா, அதுத்தகட்டமாக கவர்சி களத்தில் இறங்கவும் தயாராகிவிட்டார் போலிருக்கிறது. ஆனால் அதற்கு அவரது ரசிகர்கள் சம்மதிக்க வேண்டுமாம்.

ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டியில், "நான் பத்து வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். எனக்கென்று ஒரு இமேஜையும் உருவாக்கி வைத்திருக்கிறேன். இதுவரை கவர்ச்சி வேடங்களில் நடித்தது இல்லை. குடும்ப பாங்கான வேடங்களிலேயே நடித்திருக்கிறேன். நீச்சல் உடையில் நடிப்பது இல்லை என்ற முடிவில் நான் இல்லை. கதைதான் முக்கியம் கதைக்கு நீச்சல் உடை கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டால் நீச்சல் உடையில் நடிக்க நான் தயாரி. என் ரசிகர்கள் எனது கவர்ச்சியை விரும்ப மாட்டார்கள். அப்படி அவர்கள் விரும்பினால் நடிக்கத் தயார்." என்று கூறியிருக்கிறார்

0 comments: