Monday 18 April 2011

தேர்தல் சூதாட்டம் தொடங்கியது அடுத்து வருவது யார்?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில் எந்த கூட்டணி வெற்றி பெறும் என்ற சூதாட்டம் தொடங்கி விட்டிருக்கிறது. இதில் 100 ரூபாய்
முதல் அதிகபட்சமாக பல லட்சம் ரூபாய் வரையில் பந்தயம் கட்டப்படுகின்றன. தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்றும் திமுக 90  தொகுதிகளில்
வெற்றி பெறும் எனவும் சூதாட்டம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த தமிழக முதல்வர் யார் என்ற கேள்விக்கும் பணம் பந்தையத்தில் புரள்கிறது. அடுத்த முதல்வர் கருணாநிதியா?
ஜெயலலிதா? என்ற கேள்விக்கு சூதாட்டத்தில் பணம் பலமாக கட்டப்படுகிறது. திமுக ஆட்சி பிடித்தால் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என்றும் ஜெயலலிதாவின் வழக்கு காரணமாக ஓ.
பன்னீர்செல்வம் மீண்டும் முதல்வர் பதவிக்கு வரலாம் எனவும் பந்தயம் கட்டுப்படுகிறது. தவிரவும் அமைச்சர்களாக உள்ளவர்கள் தோல்வி அடைவார்களா என்ற பட்டியலும் பந்தயத்தில்
இடம்பெற்றுள்ளது. தேர்தல் வாக்குகளின் எண்ணிக்கைக்கு  இன்னும் ஒரு மாத காலம் உள்ளதால் இந்த அரசியல் சூதாட்டம் மேலும் சூடுபிடிக்கும் என்றார்கள் சூதாடுவோர்.
நீங்கள் சொல்லுங்கள் வெற்றி யாருக்கு விவாதங்களில் பங்கெடுங்கள் அடுத்து வருவது அதிமுகவா ? திமுகவா ?

1 comments:

said...

தற்சமயம் ஜெ கொடை நாடு செல்வதாக தெரிகிறது, அப்படியே கொடை நாடா செல்வாரா என பரபரப்பாக பேசப்படுகிறது