Friday 18 March 2011

ஆற்காடு வீராசாமி கோ.சி.மணிக்கு வாய்ப்பு தராத திமுக

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திமுகவில் இந்த முறை போட்டியிட அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. கடந்த தேர்தலில் ஆற்காடு வீராசாமி சென்னை அண்ணா நகரிலும் கோ.சி.மணி கும்பகோணத்திலும் வெற்றி பெற்றனர். மணிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நிலை சரியில்லாததால் வாய்ப்பு தரப்படவில்லை.
ஆற்காடு ஏன் ஒதுக்கப்பட்டார் என்று தெரியவில்லை. அதே போல மேலும் பல எம்எல்ஏக்களுக்கும் இந்தத் தேர்தலில் திமுக வாய்ப்பு தரவில்லை. அவர்களது விவரம்:
வி.எஸ்.பாபு (புரசைவாக்கம்)
ஏ.சின்னச்சாமி (பேரணாம்பட்டு)
சூரிய குமார் (நாட்ராம்பள்ளி)
மாலைராஜா (திருநெல்வேலி)
அப்பாவு (ராதாபுரம்)
ராஜன் (நாகர்கோவில்)
ரெஜினால்டு (பத்மனாபுரம்)
ராணி (உப்பிலியாபுரம்)
துரை. சந்திரசேகரன் (திருவையாறு)
எம்.ராஜ்குமார் (பெரம்பலூர்)
உதயம் சண்முகம் (அறந்தாங்கி)
எம்.பன்னீர்செல்வம் (சீர்காழி)
வேதரத்தினம் (வேதாரண்யம்)
க.அன்பழகன் (குத்தாலம்)
சுந்தர் (உத்திரமேரூர்)
கடந்த முறை திமுக 132 தொகுதிகளில் போட்டியிட்டது. இம்முறை 119 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.
தொகுதி சீரமைப்பிற்குப் பிறகு சில தொகுதிகள் மாறிவிட்டன. மேலும் பல புதியவர்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments: