Sunday 27 February 2011

தேர்தல் பிரச்சாரத்தில் விஜய்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
அப்பாவும் மகனும் சேர்ந்து செய்கிற குழப்பத்தில் ரசிகர்கள் குழம்பிப் போயிருக்கிறார்கள். ஒருவர் உடனே அரசியலுக்கு வருவார் என்பார், இன்னொருவர் முப்பது படம் முடிச்சிட்டுதான் அரசியல் என்பார். விஜய்யையும், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனையும்தான் சொல்கிறோம்.

விஜய் ரசிகர்களுக்கு ம‌ரியாதை கொடுத்தால் - அதாவது தேர்தலில் நிற்க சீட் கொடுத்தால் விஜய் பிரச்சாரம் செய்வார் என சூசகமாக தெ‌ரிவித்துள்ளார் எஸ்.ஏ.சி.

இதுபற்றி விஜய் எதுவும் இதுவரை தெ‌ரிவிக்கவில்லை என்றாலும் போஸ்டர் ஒட்டி, கோஷம் மட்டுமே போட்டுக் கொண்டிருந்த அவரது ரசிகர்கள் எம்எல்ஏ சீட் கிடைக்குமா என சப்புக் கொட்டி காத்திருக்கிறார்கள்.
திமுக அரசால்தான் தனது மகன் படங்களுக்கு சிக்கல் என்பதை சொல்லாமல் பலமுறை சொல்லிவிட்டார் எஸ்.ஏ.சந்திரசேகரன். முத்தாய்ப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் சென்று சந்தித்தார். தனது தாக்குதலை தற்போது திரைப்படத்திலும் தொடர்கிறார் எஸ்ஏசி.

தான் இயக்கும் சட்டப்படி குற்றம் படத்தில் சீமான், சத்யராஜை வைத்து நீதிமன்ற காட்சியொன்றை எடுக்கயிருக்கிறாராம். இதில் விவாதப் பொருளாக வைக்கப்படுவது நாட்டையே விவாதத்துக்குள்ளாக்கியிருக்கும் ஸ்பெக்ட்ரம் விவகாரம்.

நடிப்பது சத்யராஜும், சீமானும் என்பதால் பொறி பறக்கும் என்கிறார்கள் இப்போதே.

0 comments: