Friday 21 January 2011

மதுராவில் சாமியாரின் நிர்வாண விடியோ

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தமிழகத்தில் பிரேமா நந்தா, நித்தியானந்தா சர்ச்சைகள் அடுத்து தற்போது மதுராவில் ஒரு சாமியாரின் வீடியோ பரபரப்பாகி கொண்டு இருக்கிறது விவரம்,

மதுராவில் வசித்து வந்த ராஜேந்திரா என்பவர் புராணக் கதை சொற்பொழிவாளர். அவரது பக்த கோடிகளால் பகவத் ஆச்சார்யா என்று அழைக்கப்பட்டவர். ஒரு மடமும் நடத்தி வந்திருக்கின்றார்.
அங்கு வரும் தனது வெளிநாட்டு பக்தர்கள் மூலம் ஒரு புது தொழில் தொடங்கியுள்ளார். அது தான் பிட்டுப் படங்களில் அர்த்தமுள்ள இந்துமதம்! பிட்டுப்படங்களுக்கு டைரக்டர் கம் ஹீரோவான நமது சாமியார் காட்சிகளை உண்ர்ந்து நடிக்க வெளியாட்கள் ஒத்து(!) வராது என்று நினைத்தார் போலும்; தன் மனைவியிடமே கால்ஷீட் வாங்கி விட்டார். சர்ரியலிஸத்துக்காக அதில் சில குழந்தைகளையும் பங்கு பெறச் செய்திருக்கிறாராம்! பின் நவீனத்துவத்தை எதற்கு பிசினாரித் தனமாக விட்டு வைக்க வேண்டும் என்று அவரது மடத்தையும் பின்புலமாக சித்தரித்து புதுமையை புகுத்திவிட்டார்.
இப்படியான விசயம் எடுக்கும் போது ஒரு தெய்வீக எண்ணம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பின்னணியில் அவரது கடவுள்களின் புகைப்படங்களையும் வைத்துள்ளார். மடத்துக்குள்ளே எடுத்தால் Indoor Film என்றும் கம்மி பட்ஜெட் என்றும் விநியோகஸ்தர்கள் கூறிவிடுவார்கள் என்பதால் யமுனை நதிக்கரையில் சில காட்சிகளையும் எடுத்துள்ளார்.
இந்த பலான  வீடியோக்கள் எல்லாம் ஏற்கனவே பல வெப்சைட்கள் மூலமாக விற்பனைக்கு வந்துள்ளன. இந்நிலையில் பிட்டுப் படங்களால் நிரம்பி பால்வினை வைரஸ் வந்ததோ என்னவோ அவரது லேப்டாப் குளறுபடி செய்ய  அதனை ஒரு இடத்திற்கு சர்வீசுக்கு செல்ல அங்கிருந்த கரசேவகர்கள் சிலரால் பொது மக்களும் பயன்பெறும் நோக்கில் உள்ளூர் மக்களிடம் சென்று சேர்ந்துள்ளது.
எப்போதும் போல் லேட்டாக விழித்துக் கொண்ட போலீஸ் அவரைத் தேடி செல்ல அவரோ போலிசிடமிருந்து தப்பிக்கும் புனிதப் பயணத்தை மேற்கொண்டார். 15 நாட்கள் கடும் தேடலுக்குப் பிறகு அவரது வீட்டில் வைத்து போலீஸ் செக்ஸ் சாமியாரை கைது செய்துள்ளனர்.
கைது செய்தபோது ஷூடிங்கிற்கு பயன்படுத்தப்பட்ட கேமெரா, பல CD கள் கைப்பற்றியுள்ளனர். அவற்றுள் குழைந்தைகள், மனைவி மற்றும் வெளி நாட்டினரோடு 'இருக்கும்' பல மணி நேரம் ஓடக் கூடிய விடியோக்கள் உள்ளனவாம்.

0 comments: