Sunday 5 September 2010

கண்ணை தோண்டி எடுத்து சிறுமி கொடூர கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சேலம் மாவட்டம் குப்பாண்டியூர் என்கிற கிராமத்தில் வசிக்கும் ராமசந்திரன் இவரின் மகள் வனிதா(வயது10). இவர் அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த மாணவி வனிதா புத்தகப்பையை வீட்டில் வைத்து விட்டு விளையாட சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அதே ஊரில் உள்ள பெருமாள் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் வனிதா அணிந்திருந்த பிளாஸ்டிக் தோடு மற்றும் செருப்பு ஆகியவை மிதந்தது தெரியவந்தது.
 
இதைப்பார்த்த உறவினர்கள் தங்களது குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அஞ்சினர். அந்த கிணற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் கிராமத்து வாலிபர்களால் வனிதாவின் பிணத்தை மீட்க முடியவில்லை. தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் பிணத்தை தேடினார்கள்.பாதாள சங்கிலியை போட்டு தேடிய போது அந்த சங்கிலியில் வனிதாவின் தலைமுடி மாட்டிக்கொண்டது. தீயணைப்பு வீரர்கள் சங்கிலியை இழுத்து வனிதாவின் பிணத்தை மேலே கொண்டு வந்தனர்.
 
அப்போது வனிதாவின் பிணத்தை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனிதா மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தார். அவரது வலது காது அறுக்கப்பட்டு இருந்தது. வலது புருவத்துக்கு மேல் பகுதியில் இருந்து வலது கண் தோண்டி எடுக்கப்பட்டு இருந்தது. கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது.
 
இந்த கொடூர கொலை செய்தது யார் என்று தெரிய வில்லை.
 
கடந்த சில நாட்களாக அந்தப்பகுதியில் புதையல் எடுத்து தருவதாகக் கூறி ஒரு கும்பல் சுற்றி வந்தது. அந்தக் கும்பல் புதையலுக்காக நரபலி கொடுத்து, இந்தக் கொடூர கொலையை செய்து இருக்கலாம் என்று வனிதாவின் உறவினர்கள் கருதுகிறார்கள்.
 
இது தொடப்பாக ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணனும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
 
கடந்த வாரம் சேலம் கொண்டலாம்பட்டியில் காயத்திரி என்ற சிறுமியும் கொலை செய்யப்பட்டு ஓடையில் பிணமாக கிடந்தார். தற்போது மேலும் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments: