Sunday 5 September 2010

கொலை மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்' ஜெயலலிதா பேட்டி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முன்னாள் அமைச்சர் மில்லர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று காலை கொடநாட்டில் இருந்து கூடலூர் புறப்பட்டார். 12.45 மணியளவில் ஊட்டி சேரிங்கிராஸ் வந்த அவர் காரில் இருந்தபடியே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

கேள்வி: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி உள்ளது.

பதில்: தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது.

கே: மதுரையில் பொதுக்கூட்டம் அறிவித்த பின்பு உங்களுக்கு கொலை மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளதே?

ப: இந்த கொலை மிரட்டல்களுக்கு அஞ்ச மாட்டேன்.

கே: வரும் சட்டசபை தேர்தலில் கூட்டணி எப்படி அமையும்?

ப: தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. மக்கள் விரும்பும் வகையில் கூட்டணி அமையும். மேற்கண்டவாறு ஜெயலலிதா கூறினார்.

0 comments: