Sunday 22 August 2010

உண்மை ஆனால் அதிசியம் வீடியோ

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

குவைத் தமிழ்ன் செய்தியில் வந்த மறு பதிப்பு http://kuwaittamils.blogspot.com/2010/08/blog-post.html
நேபாளத்தில் நடந்த உண்மை சம்பவம் ................


உலகின் ஒரே இந்து நாடு என்று சொல்லப்படுகின்ற ( ஒரு காலத்தில் ) நேபாளத்தில் உள்ள ஒரு பகுதியல் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் தங்களுக்கென்று ஒரு பள்ளிவாசலை கட்ட முடிவு செய்து, அதன்படி கட்டியும் முடித்து விட்டனர். இறுதியாக மினாரா என்று சொல்லப்படுகிற உயர்ந்த கோபுரத்தின் மேல் அமைப்பதற்காக ஒரு கலசம் தயார் செய்யப்பட்டு பொருத்துவதற்கு எடுத்து வரப்பட்டது.

அந்த உயர்ந்த கோபுரத்தின் மேல் அந்த கலசத்தை கொண்டு சென்று பொருத்துவதற்கு தேவையான இயந்திர தூக்கியை (CRANE ) வாடகைக்கு எடுக்க முயற்ச்சித்தனர். ஆனால் சுற்று வட்டாரத்தில் மேற்படி எந்திரத்தின் உரிமையாளர்கள் யாரும் அந்த முஸ்லிம்களுக்கு வாடகைக்கு தர முன் வரவில்லை.

அதோடு மட்டுமின்றி அவர்களை கேலி செய்து முஸ்லிம்களாகிய உங்களுக்கு நாங்கள் எந்த உதவியையும் செய்ய முடியாது, நீங்கள் உங்கள் அல்லா விடமே உதவி கேளுங்கள் என்று பரிகசித்துள்ளனர்.

இதனால் வேதனை அடைந்த முஸ்லிம் மக்கள் ஒன்றாக கூடி தொழுது பிரார்த்தனை செய்துள்ளனர். அன்று இரவு அந்த பள்ளிவாசலின் இமாம் ( தொழுகை நடத்துபவர் ) தூங்கிக் கொண்டு இருந்த பொழுது அவரின் கனவில் வந்த இரு மனிதனின் நிழல் போன்றதொரு உருவம் நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம், நாளை காலை அந்த கலசத்தை பள்ளிவாசலின் அருகில் கொண்டு வந்து வைத்து அதை ஒரு வெள்ளை துணி கொண்டு போர்த்தி மூடி வைத்துவிட்டு தள்ளிசெல்லுங்கள் என்று கூறி விட்டு மறைந்து விட்டது அந்த உருவம்.


அதிர்ச்சி அடைந்த அந்த இமாம் மேற்படி சம்பவத்தை மற்றவர்களிடம் கூறி வியந்துள்ளார். மறுநாள் காலை அதேபோல் கலசத்தை ஒரு வெள்ளை துணி கொண்டு போர்த்தி வைத்து விட்டு சற்று தொலைவில் முஸ்லிம்கள் நிறு இறைவனை வணங்கினர்.

என்ன ஆச்சரியம்!!!

இனி என்ன நடந்தது என்று நீங்களே இந்த வீடியோ வில் பாருங்கள்.

"எல்லா புகழும் இறைவனுக்கே''
நன்றி  : குவைத்தமிழ்ன்

0 comments: