Wednesday 18 August 2010

மாணவனின் செக்ஸ் டார்சர் பெண் தற்கொலை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
புதுச்சேரியில் பாலிடெக்னிக் மாணவன் விஜயகுமார் கொடுத்த பாலியல் தொல்லையால் 40 வயது  பெண்மணி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் கற்பகவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மனைவி அபிராமி சுந்தரி (வயது40). இவர்கள் குறிஞ்சி நகர் 10-வது குறுக்கு தெருவில் பேன்சி ஸ்டோர் நடத்தி வருகின்றனர்.

இவர்களது கடைக்கு எதிரே வசிக்கும் பாலி டெக்னிக் கல்லூரி மாணவரான விஜயகு மாருக்கும் அபிராமிசுந்தரிக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.

அந்த பழக்கத்தை வைத்து அபிராமிசுந்தரியை விஜயகுமார் பலவந்தப் படுத்தி கற்பழித்துள்ளார். இந்த தொடர்பை தனது நண்பர்களிடமும், அந்த பகுதியை சேர்ந்த சிலரிடமும் கூறிய விஜயகுமார் மீண்டும் பலவந்தப்படுத்தி கற்பழிக்க முயன்றுள்ளார்.

இதனால் அவமானம் அடைந்த அபிராமி சுந்தரி தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அபிராமி சுந்தரி தற்கொலை செய்து கொண்ட இடத்தில் போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினார்கள். அதில், என்னுடைய சாவிற்கு நான் கடை வைத்திருக்கும் எதிர் வீட்டில் உள்ளவர்கள் தான் காரணம். என்னுடைய மானம் போனதற்கு அவர்களுடைய மகன்தான் காரணம். அவனால்தான் இந்த முடிவிற்கு வந்தேன். என்னை வலுகட்டாயமாக பலவந்தபடுத்தி கெடுத்து விட்டான்.

வெளியில் சொன்னால் உன்னுடைய மானம்தான் போகும் என்று கூறியே என்னை பலவந்தபடுத்தி கெடுத்துவிட்டான். அவனை நீங்கள் தான் சட்டபடி தண்டனை கொடுக்க வேண்டும் என்று அபிராமிசுந்தரி அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

அவரது கணவருக்கு அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், அன்புள்ள என்னுடைய கணவருக்கு நான் உங்களிடம் கூறாமல் தவறு செய்து விட்டேன் என்னை மன்னியுங்கள். நான் போனபிறகு என்னுடைய வீட்டிற்கு சென்றுவிடுங்கள். என்னை மறுபடியும் மன்னியுங்கள் என்று எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி விஜயகுமாரை கைது செய்தனர். அவர் மீது அபிராமிசுந்தரியை தற்கொலைக்கு தூண்டி யதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

0 comments: