Sunday 15 August 2010

முக்கிய அறிவிப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

ரம்ஜானை ஒட்டி துபாயில்   இந்திய கைதிகளுக்கு பொது மன்னிப்பு

துபாய், புனித ரமலான் மாதத்தையொட்டி, ஐக்கிய அரபு எமிரேட்டில் ஏராளமான இந்தியர்கள் உள்பட 724 கைதிகளுக்கு அதிபர் ஷேக் காலிபா பின்சயிது அலி நயான், பொது மன்னிப்பு அளித்துள்ளார். புதிய வாழ்க்கை தொடங்க அவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதற்காக அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். கோர்ட்டு உத்தரவுப்படி, அவர்களுக்கு சேர வேண்டிய பணம் ஒப்படைக்கப்படும் என்றும் அதிபர் கூறியுள்ளார்.
இதையடுத்து, விடுதலை ஆகும் இந்தியர்கள் பற்றிய விவரம் அறிய, அவர்களின் உறவினர்கள், இந்திய தூதரகங்களை அணுகுமாறு துபாயில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. 

 

0 comments: