Sunday 18 July 2010

நிதிநிலைமை அதிகரிப்பது வளர்ச்சியாகாது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

நிதிநிலைமை அதிகரிப்பது வளர்ச்சியாகாது : கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

தமிழகத்தின் நிதிநிலைமை அதிகரித்திருப்பதாகவும், வாங்கும் திறன் மக்களிடம் அதிகரித்துள்ளதால் விலைவாசி உயர்வு அவர்களைப் பாதிக்கவில்லை என்றும் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளிக்கும்விதமாக அறிக்கை ஒன்றை ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் மாவட்டங்கள் மற்றும் கல்லூரிகள் தொடங்குவது வளர்ச்சியாகாது என்றும், வேளாண் உற்பத்தி குறைவதைத் தடுக்க அரசு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். வருவாய் அதிகரித்திருப்பதால் நிதிஒதுக்கீடு அதிகரித்துள்ளதாகவும், அரசின் நிதிநிலைமை அதிகரிப்பது மாநிலத்தின் வளர்ச்சியாகக் கருத முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீதி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை என்றும் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

0 comments: