இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ட்டசபை காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்ட சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனத்துக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுதர்சனம் காலமானார். இதையடுத்து, அந்த பொறுப்பில் யாரை நியமிப்பது என்பது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த வார இறுதிக்குள் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டி யார் தலைவர் என்பதை அறிவிக்க காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது. இந்த பதவியை பிடிக்க காங்கிரஸ் மூத்த எம்எல்ஏக்கள் யசோதா, பீட்டர் அல்போன்ஸ், போளூர் வரதன், ராமசாமி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அனைத்து எம்எல்ஏக்களையும் அரவணைத்து செல்ல கூடிய ஒருவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை செய்து வருகிறது. அதற்கு சரியானவர் யார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர், மத்திய அமைச்சர்களிடம் காங்கிரஸ் மேலிடம் கருத்து கேட்டு, அதன் பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
1 comments:
நானும் வரலமபா தலைவர் பதவிக்கு
Post a Comment