Friday 25 June 2010

சாக வேண்டியவர் பிழைத்தார்; காப்பாற்ற போனவர்கள் மாண்டனர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
கேரள மாநிலம் கொல்லத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படிக்கும் 10 மாணவர்கள் நேற்று புனலூரிலுள்ள கல்லடை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது ஆனந்த் என்ற மாணவர் நீரில் மூழ்கினார். இதை பார்த்த மற்ற மாணவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனந்தை காப்பாற்ற முயற்சித்தபோது அபிலாஷ், சூரஜ், பிரவீன், ஹரிலால் ஆகிய மாணவர்கள் நீரில் மூழ்கினர். இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களால் ஆனந்தை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. மற்ற 4 மாணவர்களும் நீரில் மூழ்கி இறந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புனலூர் போலீசாரும், தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் 4 மாணவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.

0 comments: