Tuesday 12 January 2010

பர்தா விவகாரம் விஜய் டிவிக்கு எதிராக முஸ்லிம்கள் கடும் கொந்தளிப்பு விவரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சென்னை மாநகர காவல்துறை கமிஷனர் மற்றும் விஜய் டிவிக்கு கொடுக்கப்பட்ட கடிதம் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவது மிகவும் கேவலமானது ஒவ்வொரு பெண்களையும் நிர்பந்தபடுத்தி தான் பர்தா அணிய வைக்கின்றார்கள் என்று வக்கிரச் செய்தியை முஸ்லிம்கள் என்று தங்களை சொல்லக் கூடிய ஒழுங்கீனமான பெண்களை வைத்து நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பத் துடிக்கும் விஜய் டிவியே! முஸ்லிம்களுக்கு எதிரான மதத்துவேச நிகழ்ச்சியை ஒளிபரப்பாதே. ஒளிபரப்பமாட்டோம் என்ற உறுதிமொழியை வருகின்ற வியாழன் இரவுக்குள் (14-1-2010) வழங்கவில்லையானால் 15-1-2010 மாலை 4 மணிக்கு விஜய் டிவி அலுவலகம் முஸ்லிம்களால் முற்றுகையிடப்படும் இன்ஷா அல்லாஹ்! விஜய் டிவியின் இந்த வக்கிரச் செய்தியை ஒளிபரப்பாமல் நிறுத்தக் கோரி சென்னை மாநகர காவல்துறை கமிஷனிரிடம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நேற்று (11-1-2010) புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஒளிரப்பப்பட்டால் முஸ்லிம் சமுதாயம் மிகுந்த கொந்தளிப்பு ஆளாகும் எனவே மத துவேசத்தை பரப்பும் இந்த நிகழ்;சி தடை செய்யப்பட வேண்டும் விஜய் டிவிக்கும் எச்சரிக்கை கடிதம் நேற்று (11-1-2010) நேரடியாக தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளால் வழங்கப்பட்டுள்ளது. உலகத் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஸ்டார் விஜய் டிவிக்கு நேரடி விவாதத்திற்கு பகிரங்க அழைப்பு: போலிமதவாதிகளை வைத்து இஸ்லாத்தை கொச்சைபடுத்தும் இந்த போக்கை கைவிட்டு விட்டு பர்தா அணிவது தான் பெண்ணினத்திற்கு பாதுகாப்பானதும் கண்ணியமானது என்பதை நிருபீக்க நேரடி விவாதத்திற்கு முஸ்லிம் நாங்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக இருக்கின்றது என்ற பகிரங்க விவாத நேரடி விவாத அழைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதாரம் :http://www.tntj.net/?p=9594

19 comments:

vinu said...

விஜய் டிவி க்கு இதே வேலை , முன்பு , இதே போல வேடமிட்டவர்களை நடிக்க வைத்து , ஹிந்துக்கள் புனிதமாக கருதும் தாலியை கழட்ட சொன்னார்கள் .
இப்போது இங்கே ஆரம்பித்து விட்டார்கள் .
அந்த நிகழ்ச்சியை வழங்கும் நிறுவன தயாரிப்பை புறகணிப்போம் .

Anonymous said...

மதத்தின் அடையாளமாக பழக்க வழக்கங்களை இப்படி தான் தொ(ல்)லை காட்சிகள் நிகழ்ச்சியை கொடுத்து நமக்கு தொல்லை கொடுக்கின்றனர்,

said...

பெண்னினத்திற்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு, பர்தா அணிவதால்!?

said...

பெண்னினத்திற்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு, பர்தா அணிவதால்!?

said...

வால்பையன்
பெண்னினத்திற்கு யாரிடம் இருந்து பாதுகாப்பு, பர்தா அணிவதால்!?

athiradenews
வக்கிர புத்தி கொண்ட மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க தான்

said...

//athiradenews
வக்கிர புத்தி கொண்ட மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க தான் //

அந்த மிருகங்களை படைத்தது யார்!?

said...

//athiradenews
வக்கிர புத்தி கொண்ட மிருகங்களிடம் இருந்து பாதுகாக்க தான் //

அந்த மிருகங்களை படைத்தது யார்!?
athiradenews

மனிதன், மனிதன், அவனுக்குள் இருக்கும் மிருகம் தான் வக்கிரபுத்தி

said...

//மனிதன், மனிதன், அவனுக்குள் இருக்கும் மிருகம் தான் வக்கிரபுத்தி //

மனிதனுக்குள் மிருகம் இருக்கும் போது, மிருகத்திற்குள் மனிதம் இருக்குமா!?

மனிதனை படைத்தது கடவுள், அவன் புத்தியை படைத்தது!?

said...

வெளியே பர்தா போட்டு வாழ்ந்த இவர்களுக்கு வீட்டுக்குள்ளே கொடுமைகள் வந்தபோது கடவுள் என்ன செய்து கொண்டு இருந்தார்?

நல்லவர்களுக்கு கொடுமை நேரும் முன்னரே அதை அறிந்து காக்கும் சக்தி இல்லாதவரா கடவுள்? ஏன் இப்படி அய்யா?

அமிலப் பெண்கள் (இளகிய மனமுடையவர்கள் இப் பதிவைத் தவிர்க்கவும் )
http://rishansharif.blogspot.com/2009/01/blog-post_08.html

said...

//நல்லவர்களுக்கு கொடுமை நேரும் முன்னரே அதை அறிந்து காக்கும் சக்தி இல்லாதவரா கடவுள்? ஏன் இப்படி அய்யா?//

மறுமைக்கு சொர்க்கத்தை தயார் செய்துகொண்டிருக்கும் வேலை இருக்குமோ என்னவோ!?

என்னது!, சொடுக்கு போட்டால் வருமா!?
அப்படியிருந்தால் ஒரே நாளில் உலகம் உருவாகியிருக்குமே, எதற்கு ஏழு நாள்!

said...

Blogger வால்பையன் said...

//மனிதன், மனிதன், அவனுக்குள் இருக்கும் மிருகம் தான் வக்கிரபுத்தி //

மனிதனுக்குள் மிருகம் இருக்கும் போது, மிருகத்திற்குள் மனிதம் இருக்குமா!?

மனிதனை படைத்தது கடவுள், அவன் புத்தியை படைத்தது!?

அதிரடி செய்தி

ஆமாம் இருக்கும் மனித நேயம் இருக்கும், ஆனால் வக்கிரபுத்தி கொண்ட மனிதனிடம் --------

நல்லவர்களுக்கு கொடுமை நேரும் முன்னரே அதை அறியும் சக்தி கடவுளுக்கு உண்டு, ஆனால் மனிதனுக்குள் இருக்கும் மிருகசக்தி (வக்கிரபுத்தி ) அது மனிதனுக்கு தான் தெரியும் உதாரனமாக துபாயில் 5 வயது சிறுவனை ஒருவன் கற்பழித்து கொலை செய்து இருக்கிறான், எப்படி அவனுக்குள் இருக்கும் மிருகம் தான்

said...

//துபாயில் 5 வயது சிறுவனை ஒருவன் கற்பழித்து கொலை செய்து இருக்கிறான், எப்படி அவனுக்குள் இருக்கும் மிருகம் தான் //

சிறுவர்களுக்கும் இனி பர்தா போட்டுவிடலாமா!?

அதெல்லாம் மனநோய், முளையிலேயே தெரியும், யாரும் சிகிச்சை எடுத்து கொள்வதில்லை!

said...

ம்ம்.. நன்றிங்க...

என்னத்தான் கடவுள் சொன்னபடி பாதுகாப்பா இருந்தாலும், கெட்ட‌ மனிதனிடம் இருக்கும் மிருக குணத்தை கடவுளால் ஒன்னும் செய்ய முடியாது.

மேலும் அதில் இருந்து நல்லவர்களை, நிகழ்வு நடக்கும் முன்னரே கடவுளால் காக்க முடியாது.

அதுபாட்டுக்கு அது வேலையப்பார்க்கும் .


விளக்கத்திற்கு நன்றி!

said...

//கெட்ட‌ மனிதனிடம்//

கெட்ட மனிதர்கள் என்பவர்கள் யார்!?

சிறைச்சாலையில் இருக்கும் அனைவருமா!?

அல்லது

இஸ்லாம் ”அல்லா”த அனைவருமா!?

Anonymous said...

கெட்டவன் நல்லவன் இல்லை, மனிதனின் வக்கிரபுத்தி மிருக உனர்ச்சின் உள்ளவர்களே கெட்டவர்கள், இதற்க்கு யாரும் விதிவிலக்கல்ல இஸ்ஸலாம் கிறிஸ்துவம்,இந்துக்கள் என்று

said...

NAAI ONRU KADIKKA VARUHIRADHU ENDRAL NAAIKKU CHAIN PODANUMA? ILLAI ELLARUM BULLOT PROOF DRESS PODANUMA? YOSINGAPPA PLZ...

Anonymous said...

புல்லட் புரூப் போடுரவன் அவன் பாதுகாப்புக்கு தான், கடிக்க வரும் நாயே நாயை கட்டி போடனும்

said...

appadina gents i kattipodunga girls i edhukku kutram solringa? vakkira ennam kondavanthan andha naai. oru sila naaihalukkaga ellorum bullot proof podarudhu kastm illia?

Anonymous said...

பெண்களை யாரும் குற்றம் சொல்லவில்லை, ஒரு சில நாய்களுக்கு என்று இல்லை நமக்கு நாமே போடுகின்ற வேலி தான் போடுவது அவர்கள் இஷ்டம் இதில் உங்களுக்கு எங்க இருக்குது கஷ்டம்
எங்களை பார்க்க முடிய வில்லைனு உங்களுக்கு தான் கஷ்டமாயிருக்கிறது போல