Wednesday 15 February 2012

சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல் :ரஜினி -அஜீத்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தெரிஞ்ச சினிமாவை விட்டுவிட்டு தெரியாத அரசியலில் எதற்காக இறங்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்குப் பிறகு அரசியரஜினிலில் இறங்குவார் என பெரிய எதிர்ப்பார்ப்போடு கிசுகிசுக்கப்படுபவர்களில் ஒருவர்தான் அஜீத். அதற்கான அடையாளங்கள் அனைத்தும் கடந்த காலங்களில் அவரிடம் தென்பட்டன.
ஆனால், அஜீத்தோ நீண்ட வரிசையானாலும் நின்று ஓட்டுப்போடுவதோடு தன் அரசியல் ஈடுபாட்டை நிறுத்திக்கொள்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்.
ஏற்கெனவே தமிழ்நாட்டுல எக்கச்சக்க அரசியல் கட்சிகள் இருக்கு. அடிமட்டத் தொண்டனா வாழ்க்கையை ஆரம்பிச்சு, உண்மையா உழைச்சு, இன்னைக்கு நல்ல அந்தஸ்துல இருக்கிற அரசியல் தலைவர்களை நான் மதிக்கி றேன். அரசியல்னா என்னன்னே தெரியாம, முழுசாப் புரிஞ்சுக்காம வெறும் சினிமா பாப்புலாரிட்டியை வெச்சு அரசியல்ல நான் இறங்க மாட்டேன்.

எனக்கு சினிமா தெரியும். அரசியல் தெரியாது. தெரிஞ்ச சினிமாவை விட்டுட்டு, தெரியாத அரசியல்ல இறங்கி நானும் குழம்பி, மக்களையும் குழப்ப மாட்டேன். சுருக்கமாச் சொல்லணும்னா, அரசியல்வாதி ஆகிறதுக்கான அருகதை எனக்குக் கொஞ்சமும் கிடையாது!'' என அரசியல் ஈடுபாடு குறித்து வினவியபோது அஜீத்குமார் இவ்வாறு பதிலளித்தார்.

1 comments:

said...

தெரிஞ்ச சினிமாவை விட்டுவிட்டு தெரியாத அரசியலில் எதற்காக இறங்க வேண்டும் என நடிகர் "ரஜினிகாந்த்" கூறியுள்ளார்.

hello inthula rajini ila ajith nu chane panunga...