இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கொழும்புவிலிருந்து திருச்சிக்கு தங்கக் கட்டிகள் கடத்தப்படுவதாக திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, நேற்று காலை 8.30 மணிக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது, திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூரைச் சேர்ந்த பாலச் சந்திரன் என்பவரின் உடமைகளைச் சோதனையிட்டபோது, அவரது நடவடிக்கை அதிகாரிகளுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அவர் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தினர். அப்போது அவரது காலுக்கும் செருப்புக்கும் இடையே 4 தங்க பிஸ்கட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவையனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர். ஒவ்வொரு தங்கக் கட்டியும் 100 கிராம் எடைகொண்டதாகும். ஆகவே 4 தங்கக் கட்டிகளின் மொத்த மதிப்பு 11 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
1 comments:
தகவலுக்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"இன்றைய மனிதனுக்கு என்ன தானம் தேவை?"
Post a Comment