இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
வேளாங்கண்ணிக்கு வருகை புரியும் கேரள சுற்றுப்பயணிகளைத் தாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முல்லை பெரியாறு பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளதைத் தொடர்ந்து தமிழர்கள் பலர் கேரளாவில் தாக்கப்பட்டனர். அதன் தாக்கத்தினால் தமிழ்நாட்டில் கேரளாக்காரர்கள் நடத்தும் கடைகள், நகைக்கடைகள், மற்றும் நிறுவனங்கள் சூறையாடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுக்காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக தற்போது வேளாங்கண்ணிக்கு வரும் கேரள சுற்றுப் பயணிகளைத் தாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி சுற்று வட்டாரப்பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
2 comments:
Every action is equal & opposite reaction
தகவலுக்கு நன்றி நண்பரே!
Post a Comment