Wednesday 7 December 2011

அமீர்கான் தம்பதிக்கு ஆண் குழந்தை

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பாலிவுட் நட்சத்திரம் அமீர்கான் –கிரண் தம்பதிக்கு வாடகை தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து நடிகர் அமீர்கான் தனது மகிழ்ச்சியை இவ்வாறு பகிர்ந்துக் கொண்டார்.
“எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதை ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம். நீண்ட காலம் காத்திருந்து, சில சிக்கல்களைச் சந்தித்து, அதன் பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளதால், அவன் எங்களுக்கு மிகவும் நெருக்கமானவனாக மாறியுள்ளான்.
மருத்துவ சிக்கல்கள் காரணமாக செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து செயற்கை கருத்தரிப்பு மற்றும் வாடகை தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக்கொண்டோம். இறைவனின் கருணையை நினைத்து நாங்கள் மிகவும் பெருமை படுகிறோம்” என அமீர்கான் தாம் வெளியிட்ட அறிக்கையில்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமீர்கான் –கிரண் தம்பதிக்கு கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி குழந்தை பிறந்துள்ளது. 46 வயது நிரம்பிய அமீர்கானுக்கு தனது முதல் மனைவி ரீனா தத்தா மூலம் ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரீனா தத்தாவை விவாகரத்து செய்த பின்னர், லகான் திரைப்படத்தில் உதவி இயக்குனராகப் பணிப்புரிந்த கிரண் ராவுடன் காதல் ஏற்பட்டு 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஏற்கெனவே ஒரு முறை கர்ப்பம் தரித்து கலைந்து விட்டப்பின் நீண்டகாலமாக கிரண் ராவ் கர்ப்பமடையவில்லை. இதனைத் தொடர்ந்து வாடகைத் தாய் மூலம் அமீர்கான் –கிரண் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

0 comments: