Saturday 19 November 2011

மீனாட்சி அம்மன் கோயிலருகே விதிமீறி கட்டிய கட்டடங்களை இடிக்க உத்தரவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மதுரை: மீனாட்சி அம்மன் கோயி லைச் சுற்றி விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் சகாயம் ஆணை பிறப்பித்துள்ளார். தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. இந்தக் கோயிலைச் சுற்றியும், கோயில் கோபுரத்தை மறைக்கும் வகை யிலும் பல்வேறு கட்டடங்கள் விதி முறைகளை மீறி கட்டப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றி சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ஒன்பது மீட்டர் உயரத்துக்கு அதிகமாகக் கட்டடம் கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த உத்தரவு நாளடைவில் செயல்படுத்தப்படாமல் போனது. அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து விதிமுறைகளை மீறிய கட்டடங் களை இடிக்க ஆய்வு துவங்குவதும், பின்பு கைவிடுவதுமாக இருந்தனர். இதனால் விதிமீறிய கட்டடங் கள் அதிக அளவில் உருவாயின. இப்பிரச்சினைக்கு தீர்வு காண பொதுமக்களும், ஆன்மீக பெரி யோர்களும் அரசுக்கு கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் இந்தப் பிரச்சி னையில் மாவட்ட ஆட்சியர் சகாயம் அதிரடி நடவடிக்கை எடுத் துள்ளார். அதன்படி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி கட்டப் பட்ட கட்டடங்களின் எண்ணிக்கை அவற்றின் விவரங்களைத் தெரிவிப் பதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு ஆட்சியர் உத்தரவு பிறப்பித் துள்ளார். இதனையடுத்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி உள்ள மிக உயரமான கட்ட டங்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. இது குறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த பின்பு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி துவங்கும் என்று கூறப்படுகின்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் சகாயத்தின் இந்த அதிரடி நட வடிக்கை பொது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை தி. நகரில் விதிமீறல் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட நடவடிக்கையைப் போல மதுரை யிலும் ஆட்சியர் களம் இறங்கி யிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: