Wednesday 19 October 2011

தமிழக முதல்வருக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஜெயலலிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் அக்ரஹாரத்தில்
உள்ள கோர்ட்டில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பாதுகாப்பு ஏற்பாட்டை ஜெயாவின் கருப்பு பூனை படை ஆய்வு செய்யும் வரை நேரில் ஆஜராவதிலிருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
கர்நாடக அரசு தரப் பில் ஆஜரான வக்கீல் அனிதாய் சினாய், ‘‘ஜெயலலிதாவுக்கு கர்நாடக அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது. தனி கோர்ட்டும் தற்போது மத்திய சிறை அருகே மாற்றப்பட்டுள்ளது’’ என்றார். இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கோர்ட்டில் ஆஜராவதை 2 வாரம் தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிய ஜெயலலிதாவுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பாதுகாப்பை காரணம் காட்டி, கோர்ட்டில் ஆஜராவதை தாமதப்படுத்துவதா? என அவர்கள் கேள்வி எழுப்பினர்.
இன்று கர்நாடக அரசு தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.  ஆகியோர் உச்சநீதிமன்றத்தில்  பாதுகாப்பு குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தனர். அதில் ஜெயலலிதா நேரில் ஆஜராவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் பெங்களூர் விமான நிலையத்திலிருந்து கோர்ட் வரை பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியிருந்தனர்.  
கர்நாடக டி.ஜி.பி. மற்றும் தலைமைச் செயலாளர் அளித்த பதில் மனுவை தொடர்ந்து ஜெயலலிதா பாதுகாப்பை காரணம் காட்டி நேரில் ஆஜராவதை ஒத்திவைக்க முடியாது எனவும் நாளை அவர் பெங்களூர் சிறப்பு கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

0 comments: