Saturday 8 October 2011

தி.மு.க.வினர் கைது சரியே!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்





நிலப்பறிப்பு வழக்கில் தி.மு.க.வினரை தமிழக அரசு கைது செய்தது
சரியானதுதான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.  சத்தியமங்கலம் நகர் மன்ற தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் சுந்தர் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பேசிய இளங்கோவன் கூறுகையில், 
தமிழகத்தில் தி.மு.க.வுக்கு அவப் பெயர் ஏற்பட்டுள்ளது. தி.முக.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டால் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படும். நாட்டின் நலன் கருதி உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்திக்கிறோம். உல்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள். அப்பாவி மக்களின் விளை நிலங்களை ஏமாற்றி அபகரித்த தி.மு.க.வினரை அ.தி.மு.க. அரசு கைது செய்து வருகிறது. விடுதலை போராட்ட தியாகிகள் போல் தி.மு.கவினர் நடந்து கொள்கின்றனர். சரியான புகாரின் பேரில் ஆவணங்கள் அடிப்படையில் தி.மு.க.வினர் கைது செய்யப்படுகின்றனர். இது சரியான நடவடிக்கைதான்.
சத்தி நகர் மன்ற தலைவருக்கு போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சுந்தர் நேர்மையான முறையில் நகராட்சியை வழிநடத்துவார். காங்கிரஸ் கட்சியை ஆதரித்து நேர்மையான அரசியலை ஏற்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

0 comments: