Saturday 8 October 2011

இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை நடுக்கடலில் தாக்கி
அட்டூழியத்தில் ஈடுபட்டனர். ராமநாபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கச்சத்தீவிற்கு அருகே சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையில், அங்கே வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தடுத்து நிறுத்தினர். இச் சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது.

சுமார் 15 மணி நேரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் தடுத்துள்ளனர். 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் வெறுங்கையோடு இன்று கரை திரும்பினர்.

கடந்த ஒரு மாதத்தில் பல முறை தமிழக மீனவர்களை தாக்குவது, மீன்கள், செல்போன்களை பறித்துச் செல்வது, படகுகளை சேதப்படுத்துவது போன்றவற்றில் இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வந்தனர். இதனால் மிகப்பெரிய அச்சத்துடன் அப்பகுதி மக்கள் மீன்பிடிச்ச செல்வதில்லை.
தமிழக கடற்றொழிலாளர்களை நடுக்கடலில் வைத்து சிறிலங்காக் கடற்படையினர் தாக்கி சிறைப்பிடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளதாக தமிழக கடற்றொழிலாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. .

இதனிடையே கடற்றொழிலாளர்களை சிறிலங்காக் கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த இந்திய கடற்படையினர், கடற்றொழிலாளர்களை காப்பாற்ற முயற்சிக்காமல் திரும்பிச்சென்று விட்டனர் எனவும் சுமார் பதினைந்து மணித்தியாலங்களுக்குப் பின் தொழிலாளர்கள் சிறிலங்காக் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


0 comments: