Monday 3 October 2011

கனிமொழி ஜாமீன் மனு 17க்கு தள்ளி வைப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
2ஜி” ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கனிமொழி 2 வதுமுறை தாக்கல் செய்த ஜாமீன்  மனு வரும் 17 ஆம் திகதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கள் வரையப்பட்டு பதிவான பின்னர் ஜாமீன் மனு மீதான விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என கனிமொழி வக்கீல் தெரிவித்ததை அடுத்து நீதிபதி ஏற்றுக்கொண்டார். வரும் 15 ஆம் திகதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதின்றில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, கலைஞர் “டிவி” நிர்வாகி சரத்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் முன்னாள் தனிச் செயலர் சந்தோலியா, ஸ்வான் டெலிகொம் நிறுவனத்தின் புரோமோட்டர் ஷாகித் பல்வா, குசேகான் வெஜிடபிள்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால், சினியுக் பிலிம்ஸ் இயக்குனர் கரீம் மொரானி ஆகிய ஏழு பேரும், இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களுக்கு ஜாமின் அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதற்கு பின் தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோர முடியும். எனவே அவர்களுக்கு ஜாமின் அளிக்கக் கூடாது. கலைஞர் “டிவி”யில் கனிமொழிக்கு 20 சதவீத பங்கு உள்ளது. கலைஞர் “டிவி”யின் செயல்பாடுகளில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. கலைஞர் “டிவி”யின் அன்றாட நடவடிக்கைகளை சரத் குமார் தான் கவனித்து வந்தார். இந்த “டிவி” சேனலுக்கு வந்த 200 கோடி ரூபாய் பரிமாற்றம், நேர்மையான வர்த்தகம் தொடர்பான பரிமாற்றம் அல்ல. சட்டவிரோதமாக வந்தது. இவ்வாறு சி.பி.ஐ. மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments: