Sunday 25 September 2011

இயக்குனரை காதலிக்கும் அமலா பால்: புது பரபரப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தெய்வ திருமகள்’ படம் பெரிய வெற்றியைப் பெற்றதா அல்லது தயாரிப்பாளரின் கையை சுட்டதா
என்பது இன்னும் கூட தெளிவாக தெரியவில்லை. ஆனால் இந்தப் படம் தொடர் பில் புதுப்புது தகவல்கள் வெளி யாகி ரசிகர்களை சூடேற்றி வருவது மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது அண்மைத் தகவல். இப்படத்தின் இயக்குனரான ‘மதராசபட்டிணம்’ விஜய், பட நாயகியாக அமலா பால் மனதை கவர்ந்த கள்வராகிவிட்டாராம். கடந்த சில மாதங்களாகவே இருவரும் நெருக்கமாகப் பழகி வருவதாக கோடம்பாகத்தில் ஒரு தகவல் உலா வருகிறது. அண்மையில் விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்க திட்டமிட்டார் விஜய். இது தொடர்பாக அந்தக் கார் நிறுவனத்தை தொடர்பு கொண்ட அவர், சோதனை ஓட் டத்திற்காக ஒரு காரை அனுப்பி வைக்குமாறு கூறினாராம். கார் உரிய நேரத்தில் வந்து சேர்ந்தது. ஆனால் விஜய்க்கு அதில் தனியே சோதனை ஓட்டம் நடத்திப் பார்க்க விருப்பமில்லை. தேடிவந்த கார் நிறுவனத்தின் ஊழியர்களிடம், “என்னுடைய விருந்தினர் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார். அது வரை காத்திருங்கள்” என்று கேட்டுக் கொண்டாராம். அவர் குறிப்பிட்ட விருந்தினர் வேறு யாருமல்ல, அமலா பால். விருந்தினர் வந்து சேர்ந்ததும் அவரை காரின் முன் இருக்கை யில் அமர வைத்து அதன் பிறகே சோதனை ஓட்டம் நடத்திப் பார்த்தாராம் விஜய். சரி, இந்த பரபரப்புச் செய்தி குறித்து அமலா பால் தரப்பு என்ன செல்கிறது? “இப்படிப்பட்ட செய்திகளைப் படித்துப் படித்து அலுத்துப் போய் விட்டது. இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் பிறகு வேலையைக் கவனிக்க முடியாது” என்று அலுத்துக் கொள்கிறாராம் அமலா பால்.

0 comments: