Friday 9 September 2011

குண்டு வைத்த நபர் யார்? நேரில் பார்த்தவர் பேட்டி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வெள்ளைச் சட்டை அணிந்த ஒருவர், கையில் கேஸ் உடன் மேல் நீதிமன்றத்திற் குள் வந்ததை பார்த்தேன்.
 அடுத்த ஒரு சில நிமிடங்களில்தான் குண்டு வெடித்தது. அந்த நபர்தான் சம்பவத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.




டில்லி உயர் நீதிமன்ற குண்டு வெடிப்புக்கு சூட்கேசில் வைக்கப்பட்ட வெடிகுண்டை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கியிருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ள நிலையில் சூட்கேஸ் உடன் ஒருவர் வந்ததை பார்த்ததாக உயர் நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றில் பங்கேற்க வந்த, மகேந்திர சிங் என்பவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.



உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையில், ஆஜராக வந்த மகேந்தர் சிங் என்பவர் கூறியதாவது; வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்றத்திற்கு வந்தேன். நுழைவாயில் வரவேற்பு அறையில் உயர்நீதிமன்றத்தின் உள்ளே செல்வதற்கு அனுமதிச் சீட்டு வாங்குவதற்காக பலர் வரிசையில் காத்திருந்தனர்.



இந்த நடைமுறை எனக்கு தெரியாது. என் நண்பர் ஒருவருடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தேன், அப்போது வரிசையை நோக்கி வெள்ளை சட்டை அணிந்த ஒருவர் சூட்கேசை கையில் தூக்கிக் கொண்டு வந்தார். அடுத்த சில நிமிடங்களில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. அதன் பின்னர் நான் எதையும் பார்க்க முடியவில்லை.



எல்லாரும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சம்பவம் நடந்த பின், பொலிஸார் வந்தனர். அதில் ஒரு பொலிஸ்காரரிடம், நீதிமன்றத்தை விட்டு வெளியே செல்ல உதவுமாறு கேட்டேன். அவரும் உதவினார். இவ்வாறு மகேந்தர் கூறி

0 comments: