Tuesday 23 August 2011

திமுக-பாஜக எம்பிக்கள் மோதல்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மக்களவை கேள்வி நேரத்துக்காக நண்பகலில் கூடியதும், இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக பேசுமாறு திமுக
 எம்பி டி.ஆர்.பாலுவை மக்களவைத் தலைவர் மீரா குமார் கேட்டுக் கொண்டார்.
அண்ணா ஹசாரேவின் போராட்டத்தையொட்டி ஊழல் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர். இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்.
எனினும் ஊழல் குறித்து விவாதிக்க ஒப்புக்கொள்ளப்பட்டிருந்ததாக பாஜக எம்பிக்கள் கூறினர். ஊழல் குறித்து விவாதிக்கக் கோரி அவையின் மையப்பகுதிக்கு அவர்கள் விரைந்தனர். இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்களும் அவையின் மையப் பகுதிக்குச் சென்றனர்.
விவாதத்துக்கு எந்த விவகாரத்தை முதலில் எடுத்துக்கொள்வது என்பதில் திமுக- பாஜக எம்பிக்களிடையே மக்களவையில் இன்று மோதல் ஏற்பட்டதால் அவை நடவடிக்கைகள் இன்று பாதிக்கப்பட்டன.




இருதரப்பினரும் தங்களது கருத்தை வலியுறுத்தியபடி இருந்ததால் அவையை ஒத்திவைப்பதாக மீராகுமார் அறிவித்தார்.

0 comments: