Monday 22 August 2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ அவர்கள் நிகரற்ற தலைமைத்துவ திறமை பெற்றவர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். தில்லைநாதன் எழுதிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வாழ்க்கை வரலாறு
பற்றிய முதலாவது தமிழ் புத்தகத்தில் ஜனாதிபதி அவர்களின் சிறந்த ஆளுமைத்திறன் மற்றும் அவரது நற்பண்புகள் குறித்து ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க பிரைம் ரீவி என்ற ஆங்கில தொலைக்காட்சிச் சேவைக்கு அளித்த பேட்டியின் தமிழாக்கம் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த பேட்டி மனேஜ்மன்ட் டைஜஸ்ட் என்ற 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் வெளிவந்த ஆங்கில சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. இந்த சஞ்சிகையின் ஆலோசனை கூறும் ஆசிரியராக தெங்கு அபிவிருத்தி மக்கள் தோட்ட அபிவிருத்தி முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் அனுர சிரிவர்தன இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்க ஆங்கிலத் தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டி

கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிறந்த தலைவர் என்பதும், ஒரு தேசத் தலைவர் என்பதும் எங்களுக்கு நன்கு தெரியும். நீங்கள் ஜனாதிபதி அவர்களின் செயலாளர் என்ற முறையில், இதைவிட பல விசயங்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். அவை பற்றி உங்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். திரு. மஹிந்த ராஜபக்ஷ அவர்களை இலங்கையின் ஜனாதிபதியாக அல்ல, நீங்கள் ஒரு மனிதனாக எப்படி பார்க்கிaர்கள்?

பதில்: திரு. லலித் வீரதுங்க. ஆம், அவர் பொது மக்களுடன், ஒரு சாதாரண கிராமத்து குடிமகனுடன், நண்பனுடன் அல்லது சமூகத்தில் உயர் பதவி வகிக்கும் உத்தியோகஸ்தருடன் பேசும் போது எப்போதும் மனிதாபிமானத்திற்கே முக்கியத்துவம் அளிக்கும் ஒரு நல்ல பணிப்பாளர். இதனை ஓரிரு சொற்களில் விளக்கிக் கூறுவதாயின், இவர், மக்களை தன் பால் ஈர்ந்து எடுப்பதில் வல்லமை பெற்றிருக்கிறார். அதாவது, அவர் தன்னை சந்திப்பவர்களின் இதயத்தில் குடிபுகுந்து விடுவார். ஜனாதிபதி அவர்களை நன்கு தெரிந்தவர்கள் ஒரு விசயத்தை எனக்கு பல தடவைகள் கூறியிருக்கிறார்கள்.

மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஐந்து நிமிடம் மாத்திரம் கொடுத்தால், அவர் தன்னுடைய எந்த எதிரியையும் தன்னுடைய உற்ற நண்பனாக மாற்றிவிடும் திறமை மிக்கவர் என்று கூறுவார்கள். இது அவருடன் உடன்பிறந்த ஒரு மகோன்னதமான திறமையாகும். பல்லாண்டு கால அனுபவத்தின் மூலமும் மக்களைப் பற்றி கற்றறிவதன் மூலமும், அவர்களின் நடை, உடை, பாவனை களை அவதானிப் பதன் மூலமும்தான் ஒருவர் இந்த திறமையை பெற முடியும். திரு. ராஜபக்ஷ அவர்களைப் போன்ற வேலைப் பளுமிக்க ஒரு தலைவருக்கு இந்த சாதனையை புரிவது அவ்வளவு இலகுவான செயலல்ல. ஆயினும், அவர் ஒரு மனிதனாக இதனை சரளமாக சாதித்து விடுகிறார். அவரிடம் பலதரப்பட்ட நற்பண்புகள் இருப்பதனால், அவரிடம் மக்கள் ஈர்ந்து இழுக்கப்படுகின்றனர்.

கேள்வி: அவருடைய தனித்துவமும், எடுப்பான தோற்றமும் இந்த வெற்றிக்கு அனுகூலமாக அமைந்திருக்கிறதா?

பதில்: நான் முகாமைத்துவத் துறையில் கற்றுக்கொண்ட விடயங்களிலிருந்து, ஒருவர் அளிக்கும் தலைமைத்துவத்திலி ருந்து அவரது தனித்துவத்தை எடை போடக்கூடிய ஓரளவு திறமை எனக்கு இருக்கிறது. ஒருவருடைய தனித்துவத்தில் அவருடைய தோற்றம், குணம், பாவம் ஆகிய பல அம்சங்கள் உள்ளடங்கி இருக்கின்றன. இதில் மனிதாபிமானம், ஒருவரை புரிந்துகொள்ளும் திறமை, கருணை ஆகியனவும் ஒன்றிணைந்து இருக்கும். ஜனாதிபதி அவர்களைப் பற்றி சில முகாமைத் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் எழுத ஆரம் பித்து இருப்ப தாக நான் கேள்விப் பட்டேன். அந்த படைப் புக்கள் விரை வில் வெளி வரும் என்று நினைக்கி றேன். மஹிந்த ராஜபக்ஷ என்ற இந்த மனிதர் தனது வாழ்க்கை யில் பல்வேறு திறன்களை ஒன்றி ணைத்துக் கொண்டிருக்கிறார் என்பதே எனது நிலைப்பாடாகும்.

கேள்வி: ஒரு நல்ல தலைவனாக உருவெடுப்பதற்கு, ஒரு நல்ல தோற்றமும், தலைமை தாங்குவதற்கான பண்புகளும் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தன்னை பின்பற்றி வருபவர்கள் மத்தியில் நம்பிக்கை மற்றும் உற்சாகம் ஊட்டும் திறமை, இவர்களிடம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். திரு. மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த திறமைகள் இருக்கின்றனவா?

பதில்: இதற்கு நான் கல்வி அடிப்படையிலான ஒரு எண்ணக் கரு கட்டமைப்பு பற்றி ஞாபகப் படுத்த வேண்டியிருக்கிறது. பல வருடங்களுக்கு முன்னர் அமெரிக் காவில் ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. ஒரு உண்மையான தலைவரின் அதி முக்கிய சிறப்பம்சங்கள் எவ்விதம் இருக்க வேண்டும் என்பது குறித்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்கான தகவல்கள் ஊழியர்களின் மூலமே பெறப்பட்டது. ஒரு நல்ல தலைவருக்கு இருக்க வேண்டிய சிறப்பம்சம் நம்பிக்கையாகும். நீங்கள் ஒரு தலைவர் மீது நம்பிக்கை வைத்திருந்தால், அந்த தலைவர் உங்கள் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்காதவராக இருப்பார். ஒருவர் நம்பக்கூடிய வராக இருப்பது, நம்பிக்கையி லிருந்தே உருவாகிறது. மஹிந்த ராஜபக்ஷவும் நம்பிக்கைக்குரிய ஒரு மனிதன். அவர் ஒரு வாக்குறுதி அளித்தால், அதனை நிச்சயம் நிறைவேற்றுவார். இதனால் என்ன விளைவுகள் ஏற்பட்டாலும், அவர் துணிவுடன் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவார்.

கேள்வி: அந்த நம்பிக்கையை அவர் எவ்விதம் உருவாக்கிக்கொள்கிறார்?

பதில்: நேர்மை, கபடமற்ற நற்பண்பு ஆகிய அணிகலன்கள் மூலமே இவர் அந்த நம்பிக்கையை உருவாக்குகிறார். இவர் தன்னுடைய மறைந்திருக்கும் நற்பண்புகளை வெளிப்படுத்தும் குணமுடையவர். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு நல்லவர் என்று வெளியிலுள்ள வர்கள் நினைப்பது போலவே, அவர் தனது உண்மையான வாழ்க்கையிலும் நல்லவராக இருக்கிறார். இவர் உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசுபவர் அல்ல. அவர் கோபமடையும் போது, அதனை ஒரு கேலிக் கூத்தாக மாற்றக் கூடியவரும் அல்லர். கோபமடையும் போது உண்மையிலேயே கோபமடைவார். தனிப்பட்ட விசயங்களுக்காக அவர் என்றுமே கோபப்படுவதில்லை. தான் நினைத்த மாதிரி ஒரு பணி நிறைவேற்றப்படவில்லை என்று தெரிந்துகொண்டால் அவர் கோபப்படுவார். என்றுமே, தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் கோபப்படுவதில்லை.
அவர் மற்றவர்களுடன் பழகும் போது, நடந்து கொள்ளும் விதத்தை நான் நன்கு அறிவேன். ஒரு வெளிநாட்டிற்கு ராஜதந்திர விஜயத்தை மேற்கொள்ளும் போது, அவரது தனிப்பட்ட உதவியாளர் அவருக்கு சரியான காலணியை அல்லது அதுபோன்ற ஒரு விடயத்தை தயார்படுத்திக் கொடுக்க தவறிவிட்டால், அவர், உடனடியாக அந்த உதவியாளரை ஏசிவிடுவார். பின்னர் இவனை ஏசிவிட்டேன் என்று மனம் வருந்தி, விரைவில் சகஜ நிலைக்கு திரும்பிவிடுவார்.

கேள்வி : இவரது கோபம் நீண்ட நேரம் நீடிக்குமா?

பதில்: இல்லை. சில வினாடிகளுக்கு மாத்திரம் தான் இருக்கும். அவர் எப்போதும் மற்றவர்களை சாதாரண நிலையில் பதற்றமடையாமல் இருக்கச் செய்வார். பின்னர், நான் ஏன் கோபப்பட்டேன் என்று, அவர் விளக்கிக் கூறுவார். இது ஒரு நல்ல தலைவனின் உன்னத குணாதிசயம் ஆகும். அவர், தனது உண்மையான தனித்துவத்தை தனது தோற்றத் தின் மூலம், பிரதிபலிக்கச் செய்கிறார். எனவே அவரிடம் ஏச்சுப்பட்டாலும் ஒருவரும் அதனால் கோபித்துக் கொள்வதும் இல்லை. அதனால் தான், மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு 5 நிமி டங்கள் மாத்திரம் கொடுங்கள், அவர் அந்த மனிதரை தன்னுடைய உற்ற நண்பனாக்கி விடுவார் என்று என்னிடம் ஒருவர் கூறினார்.

0 comments: