Monday 1 August 2011

ராஜாத்தி அம்மாளின் கணக்காளர் கைது

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தி.மு.க கட்சியின் தலைவரும் முன்னால் தமிழக முதல்வருமான
கலைஞர் மு.கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார்.




முன்னதாக திருச்சி, எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் ராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்த நிர்மலா தேவி என்பரும் பாதிக்கப்பட்ட 31 பேரும் நில அபகரிப்பு புகார் அளித்தனர்.



ராஜாத்தி அம்மாளின் கணக்காளரான ரமேஷ் தங்களை மிரட்டி நிலத்தைப் பறித்துக் கொண்டதாக அவர்கள் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இவர் கலைஞர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாளின் கணக்காளராகப் பணியாற்றி வருவதாகவும், தன்னை எதுவும் செய்ய முடியாது என்று கூறி மிரட்டியதாகவும் அவர்கள் கூறியிருந்தனர்.



இவ்வழக்கை விசாரித்த போலீசார் நேற்று ரமேஷை கைது செய்தனர்.

0 comments: