Thursday 28 July 2011

குளிர்சாதனப் பெட்டிக்குள் திடீர் பனிலிங்கம்: பொது மக்கள் வியப்பு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தூத்துக்குடி: வீட்டில் இருந்த குளிர்சாதனப் பெட்டிக்குள் திடீர் என்று
பனிலிங்கம் போன்ற உருவம் தோன்றியதால் பொது மக்கள் வியப்படைந்தனர்.


தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி விஜி. இருவரும் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள்.

அண்மையில் ராதா கிருஷ்ணன் தனது வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதில் லிங்க வடிவில் ஐஸ்கட்டி ஒன்று இருந்துள்ளது. இதைக் கண்டு ராதாகிருஷ்ணன் மிகுந்த பரவசம் அடைந்தார்.

அமர்நாத்தில் உள்ள சிவலிங்கமே தன் வீட்டில் எழுந்த ருளியுள்ளதாகக் கருதிய அவரது மனைவி விஜி, கடந்த சில நாட்களாகப் பக்திப் பெருக்குடன் அந்த லிங்க வடிவிலான ஐஸ் கட்டிக்குப் பூஜைகள் செய்து வழிபட்டு வந்திருக்கிறார்.

அந்த லிங்க வடிவிலான ஐஸ் கட்டி இதுவரை உருகவே இல்லை என்பது இருவருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத் தியது. இதையடுத்து ராதா கிருஷ்ணன் வசிக்கும் பிள்ளை மார்க்கெட் பகுதி மக்களுக்கும் இச்செய்தி காட்டுத் தீபோல் பரவிவிட்டது.

செய்தியைக் கேள்விப்பட்ட ஏராளமான பொதுமக்கள் அவரது வீட்டிற்குப் படையெடுத்தனர்.

குளிர்சாதனப் பெட்டியில் காட்சி தந்த லிங்க வடிவத்தைக் கண்டு பொது மக்களும் பரவசம் அடைந்து அதற்கு தீபாராதனை காட்டியும் பல்வேறு பூஜைகளும் செய்து வழிட்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 comments: