இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மதுரையை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2 ஆண்டுகளாக பலவந்தமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு 100க்கும்
அதிகமானோரால் சீரழிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ராமேஸ்வரம் நகராட்சி தலைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வாகைக்குளத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மகள் பாண்டிசெல்வி (வயது17). இவருக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. கணவருடன் ஏற்பட்ட தகராறில் பாண்டிசெல்வி தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் திருமங்கலத்தில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்தார். அப்போது அங்கு வேலை பார்த்து வந்த பூங்கோதையுடன் பழக்கம் ஏற்பட்டது. பாண்டிசெல்வி அழகாக இருந்ததால் பூங்கோதையின் அம்மா அவரை விபசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டார்.
அவர் மறுக்கவே அவரை அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மதுரை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், ராமேசுவரம் போன்ற இடங்களில் பாண்டிசெல்வியை அடைத்து வைத்து 100க்கும் அதிகமானோர் அந்த சிறுமியை சீரழித்துள்ளனர். சுமார் 2 ஆண்டுகாலமாக அறையில் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
பின்னர் பாண்டிசெல்வி அந்த கும்பலிடம் இருந்து தப்பி வந்து ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக திருமங்கலம் கப்பலூரை சேர்ந்த பாண்டிசெல்வியின் தோழியின் அம்மா, கீழக்குயில்குடி சத்யா, திருப்பரங்குன்றம் செல்வி, திருமங்கலம் சந்திரா, மதுரை கலைச்செல்வி, அவருடைய கணவர் சதீஷ், காரைக்குடி டி.கே.நகர் ருக்மணி, ராமேசுவரம் இளங்கோ, அய்யர், ராமேசுவரம் நகராட்சி தலைவர் அப்துல் ஜலீல், சாத்தான்குளம் சேக், ராமநாதபுரம் ஆனந்தா, மதுரை ஆட்டோ டிரைவர் பாண்டி, ராஜேந்திரன் ஆகிய 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
பாண்டிசெல்வியிடம் நடத்திய விசாரணையில் அவரை வலுக்கட்டாயமாக அறையில் அடைத்து வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாகவும், விலை உயர்ந்த சொத்துக்களை தருவதாகவும் ஆசைகாட்டி பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
தன்னைப்போலவே ஆந்திராவை சேர்ந்த பல மைனர் பெண்களை , இந்த கும்பல் விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதுதவிர மேலும் பல அரசியல் முக்கிய பிரமுகர்களும், தொழில் அதிபர்களும் தன்னை சீரழித்ததாகவும், அவர்களை அடையாளம் காட்டப் போவதாகவும் தெரிவித்தார்.
கொச்சியில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல இந்த சம்பவமும் பெரும் புயலைக் கிளப்பும் எனத் தெரிகிறது.
0 comments:
Post a Comment