Tuesday 31 May 2011

சிறைச்சாலையில் நல்லவராக இருக்கும் ஸ்பெக்ட்ராம் ராஜா

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மற்ற கைதிகளைப் போல் இல்லாமல் சிறைச்சாலையில் மிகவும் நல்லப் பிள்ளையாக நடந்து கொள்வதாக
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு அங்குள்ள அதிகாரி ஒருவர் பத்திரம் கொடுத்திருக்கிறார்.
ஸ்பெக்றம் ஊழல் வழக்கில் கடந்த மூன்று மாத காலமாக சிறையில் தனது காலத்தை ராஜா நகர்த்தி வருகிறார். தொடக்கத்தில் சக கைதிகளோடு பேச மறுத்த ராஜா இப்போது மிக சகஜமாக பழக ஆரம்பித்து விட்டிருக்கிறார். எதற்குமே பிடிவாதம் பிடிக்காத ராஜா தமக்கு தமிழ்ப்பத்திரிகை மட்டும் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க அதற்கும் சிறைச்சாலை தரப்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டிருக்கிறது. ராஜா கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி திகார் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார். அவர் 9 வார்டு சிறையில் 1ஆம் எண் அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நாள் தோறும் ராஜா, காலையில் வாக்கிங், பின்னர், நாளிதழ் படிப்பது பின்னர் வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டை புசிப்பது அதை சக கைதிகளுக்கும் கொடுத்து ருசிக்க செய்வது என காலத்தை தள்ளி வருகிறார்.

0 comments: