Tuesday 12 April 2011

நண்பரை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த நபர்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் பட்டேல்(25). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் லட்சுமண் பட்டேல்(22). இருவரும் நண்பர்கள். அவர்கள் இமாச்சலபிரதேசத்தில் உள்ள மணாலிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார்கள்.
அப்போது அவர்களுக்குள் பணம் செலவு செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமண் பட்டேல், சஞ்சய் பட்டேலை கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஒவ்வொரு பாகங்களையும் வெளியில் எடுத்துச் சென்று காட்டுப்பகுதியில் வீசினார்.
பின்னர் அவர் அங்கிருந்து சொந்த ஊருக்கு சென்று விட்டார். சஞ்சய் பட்டேல் ஊர் திரும்பாததால் அதுபற்றி அவரது உறவினர் லட்சுமண் பட்டேலிடம் கேட்டனர். அதற்கு அவர் சஞ்சய் பட்டேல் காணாமல் போய் விட்டார் என்று கூறினார்.
இதற்கிடையே சஞ்சய் பட்டேலின் தலையை போலிசார் கண்டு எடுத்தனர். அது யாருடைய தலை? என்பதை  போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அதை எரித்து விட்டனர். சில நாட்கள் கழித்து உடலின் மற்ற பாகங்களும் போலிசாருக்கு கிடைத்தன.
அவற்றை பிரேத அறையில் பத்திரப்படுத்தி வைத்தனர். இந்த நிலையில் சஞ்சய் பட்டேலின் உறவினர் ராம் பூச்சன் பட்டேல் மணாலிக்கு வந்து சஞ்சய் பட்டேலை காணவில்லை என்று போலிசில் புகார் கொடுத்தார்.
அவர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று உடலை காண்பித்தனர். அது சஞ்சய் பட்டேலின் உடல் தான் என்று அவர் அடையாளம் காட்டினார். போலிசார் லட்சுமண் பட்டேலை கைது செய்தனர். விசாரணைக்கு பின் அவர் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார்.

0 comments: