Thursday 30 December 2010

தனித்து நின்றால் 100 தொகுதிகளில் பா.ம.க. ஜெயிக்கும் அல்லது ஆட்சியை பிடிக்கும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
திருவள்ளூரில் பா.ம.க. பயிற்சி முகாம் நடந்தது. இதில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
சட்டசபை தேர்தல் வருவதை யொட்டி ஒவ்வொரு கிளை நிர்வாகிகளும் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும்.இன்றைக்கு மதுவை ஒழிக்க பா.ம.க. மட்டும்தான் பாடுபட்டு வருகிறது. மதுவுக்கு அடிமையாகும் பழக்கத்தை இளைஞர்கள் கைவிட வேண்டும். ஜனவரியில் இருந்து வீடு, வீடாக பா.ம.க.வுக்கு உறுப்பினர் சேர்க்கையை தொடங்க வேண்டும்.
கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி மாவட்டங்களில் வன்னியர்கள் அதிகம் இல்லை. ஆனால் இங்கு அதிக கிளை உள்ளது.வன்னியர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு கட்சிக்காக பாடுபட வேண்டும்.
வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்தாலும் தனித்து நின்றாலும் நமது வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
நீங்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் பா.ம.க. தனித்து நின்று 100 இடங்களை பிடிக்கும் என்றார்.முன்னதாக கிளை நிர்வாகிகளை மேடைக்கு அழைத்து எப்படி பொதுமக்களை சந்தித்து வாக்கு கேட்க வேண்டும் என்று பயிற்சி அளித்தார். வன்னிய சமுதாய மக்கள் 2? கோடி பேர் வாக்களித்தால் பா.ம.க. ஆட்சியை பிடிக்கும். ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மது விலக்கும், இலவச கல்விக்காகவும் தான் முதல் கையெழுத்து போடப்படும். 
ராமதாஸ் சொல்வது சரியா அல்லது இந்த வருடத்தின் சிறந்த காமெடியா நீங்கள் க்ருதுகிரிர்களா  உங்கள் பதிலை பின்னோட்டத்தில் சொல்லுங்களேன்

1 comments:

said...

சரியோ, காமடியோ நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள்.

பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?

Wish You Happy New Year

http://sakthistudycentre.blogspot.com

என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...